districts

img

போதைக்கு எதிராக வாலிபர்கள் சைக்கிள் பிரச்சாரம்

சிதம்பரம், மார்ச் 9- சிதம்பரம் அருகே கீரப் பாளையத்தில், போதை யற்ற தமிழ்நாட்டை உரு வாக்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தும் 1  கோடி கையெழுத்து இயக் கத்தின் ஒரு பகுதி யாக சைக்கிள் பிரச்சாரம் நடைற்றது. இந்நிகழ்ச் சிக்கு பயணக்குழுத் தலை வர் வசந்த் தலைமை தாங்கி னார். சைக்கிள் பிரச்சார பயணத்தை முன்னாள் மாவட்டச் செயலாளர் கிருஷ்ணன் கொடிய சைத்து துவக்கி வைத்தார். கீரப்பாளையம், நெடுஞ் சேரி,புத்தூர் உள்ளிட்ட  10 கிராமங்களில் பொது மக்களிடம் கையெழுத்து பெற்றனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செய லாளர்  பழ.வாஞ்சிநாதன், சிபிஎம் ஒன்றியச் செய லாளர்  செல்லையா, வாலி பர் சங்க மாவட்டத் தலைவர் சின்னதம்பி, மாவட்டப் பொருளாளர் சதிஷ் குமார், மாநில இணைச் செய லாளர் செல்வராஜ் உள் ளிட்டோர் உரையாற்றினர்.