சிதம்பரம், மார்ச். 1- சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக்கழகத்தில் 205 தொகுப்பு ஊதிய ஊழியர்கள் கடந்த 13 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். மிகவும் சொற்ப ஊதியத்தில் பணி யாற்றி வரும் இவர்கள், தங்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தி 10 ஆண்டு களுக்கு மேலாக தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பிப்ர வரி மாதம் சம்பளம் இதுவரைக்கும் வழங்கப்பட வில்லை. இதனையடுத்து பல்கலைக்கழக துணை வேந்தர் அலுவலகத்தின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்கிற ஒற்றை கோரிக்கையை முன்வைத்தனர்.