districts

img

சேத்தூரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

இராஜபாளையம், ஜூன் 15- விருதுநகர் மாவட்டம் ராஜ பாளையம் அருகே சேத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் ராமர், ஒன்றிய செயலாளர் சந்தனகுமார், தங்கவேல், குருநாதன் குருவு ஆகி யோர் பேசினர்.  டாஸ்மாக் கடை அரு கில் வங்கி, மருத்துவமனை, மருந்த கம், பெண்கள் பணியாற்றும் ஆலை  போன்றவை  இருந்தும், போக்கு வரத்து நெருக்கடி கடுமையாக இருந்  தும் இந்த கடை அகற்றப்படாதது கண்டிக்கத்தக்கது எனவும், உடனடி யாக இந்த கடையை அகற்றுமாறும் வலியுறுத்தினர்.

;