districts

img

சிபிஎம் முதுபெரும் தோழர் எம்.முத்துராமலிங்கம் மறைவு அனைத்துக் கட்சியினர் அஞ்சலி

அறந்தாங்கி, ஏப்.27-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழர் எம்.முத்துராம லிங்கம் (72) உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை இரவு காலமானார். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதி  நிகழ்ச்சியில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டக் குழு  உறுப்பினர், புதுக்கோட்டை மாவட்டக் குழு உதயமானபோது முதல் செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தில் மாவட்டத் தலை வர், செயலாளர், மாநிலக்குழு உறுப்பி னர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு  முன்னணியின் மாவட்டத் தலைவர் என பல்வேறு பொறுப்புகளில் பல ஆண்டு கள் மக்கள் பணியாற்றியவர். ஒன்றுட்ட அறந்தாங்கி தாலுகாவில் தனது சொந்த ஊரான காரக்கோட்டையில் கட்சி யின் முதல் கிளையையும், விவசாயி கள் சங்கக் கிளையையும் தொடங்கிய வர். இளைஞர்களை கட்சிக்குள் கொண்டுவந்து வளர்த்தெடுத்தெடுப்ப தில் முக்கியப் பங்காற்றியவர். விவசாயிகளுக்காக, விவசாயத் தொழிலாளர்களுக்காக, தொழிலாளர் களுக்காக, மீனவர்களுக்காக எண்ணற்ற போராட்டங்களை தலைமை யேற்று நடத்தியவர். ஒரு குட்டி முத லாளித்துவ குடும்பத்தில் பிறந்தாலும் குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக் காக சமரசமற்ற போராட்டங்களை நடத்தி வெற்றிகண்டவர்.

தொடர்ந்து பல சிரமங்களை சந்தித்துவந்த காவிரி கடைமடைப் பகுதி விவசாயிகளையும், ஏரிப்பாசன விவ சாயிகளையும் அமைப்பாகத் திரட்டி அவர்களின் கோரிக்கைகளை வென்றெடுத்தவர். அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி பகுதிகளில் கட்சி அமைப்புகளையும் தாண்டி வெகுமக்களின் தலைவராக உயர்ந்தவர். சித்த மருத்துவத்திலும் நிபு ணத்துவம் பெற்றவராக விளங்கினார். பல பரிசோதனைகளை செய்து புதிய மருந்துகளை உருவாக்கினார். புதுக்கோட்டை மாவட்டத்தையும் தாண்டி இவரது மருத்துவத்திற்கு நல்ல பெயர் இருந்தது. தொடர்ந்து மக்கள் பணியோடு, மருத்துவப்பணியும் ஆற்றிவந்த தோழர் எம்.முத்துராமலிங்கத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்றுவந்த தோழர் எம்.முத்துராமலிங்கம் திங்கள்கிழமை இரவு காலமானார். தோழரின் மறை வுக்கு செவ்வாய்க்கிழமையன்று அனைத்துக் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.வி.நாகராஜன்,  எம்.சின்னத்துரை, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், சிபிஐ மாவட்டச் செயலாளர் மு.மாதவன், சட்ட மன்ற உறுப்பினர் இ.ஏ.ரெத்தினசபாபதி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் உதயம் சண்முகம், மணமேல்குடி ஒன்றியப் பெருந்தலைவர் இ.ஏ. கார்த்திகேயன்,  திமுக மணமேல்குடி ஒன்றியச் செயலாளர் சக்தி ராமசாமி, அறந்தாங்கி அதிமுக ஒன்றியச் செய லாளர் பெரியசாமி, மணமேல்குடி ஒன்றி யச் செயலாளர் துரை மாணிக்கம், அறந்தாங்கி  நகரச் செயலாளர் ஆதி. மோகனகுமார், காங்கிரஸ் நகரத் தலை வர் வீராச்சாமி, விசிக சார்பில் கலை முரசு,  தி.க. மாவட்ட துணைத்தலைவர் பன்னீர்செல்வம், தேமுதிக நகரத் தலை வர் மணிராஜ், சமாஜ்வாடி மாவட்டத் தலைவர் சரவணமுத்து, சிபிஎம்  மூத்த  தோழர் எம்.ஜியாவுதீன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் க.செல்வ ராஜ், எஸ்.சங்கர், எஸ்.பொன்னுச் சாமி, ஏ.ஸ்ரீதர், கே.சண்முகம், சி.சுப்பிர மணியன், சி.அன்புமணவாளன்,  ஜி.நாகராஜன், த.அன்பழகன் மற்றும் வர்க்க, வெகுஜன அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அறந்தாங்கியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இறுதி நிகழ்வைத் தொடர்ந்து அவரது சொந்த  ஊரான காரக்கோட்டையில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. தோழர் முத்து ராமலிங்கத்திற்கு தனபாக்கியம் என்ற மனைவியும் கண்ணன் என்ற மகனும், ஆனந்தி என்ற மகளும் உள்ளனர்.