விருதுநகர மாவட்டம் திருவில்லிபுத்தூர் நகராட்சி இரண்டாவது வார்டு ரைட்டன்பட்டியில் நகராட்சிக்கு சொந்தமான சுகாதார வளாகம் உள்ளது இதை நகராட்சியின் உத்தரவின் பேரில் திங்கட்கிழமை ஊழியர்கள் பூட்டி விட்டனர். இதையடுத்து பகுதி மக்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு நகராட்சி அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். சுகாதார வளாகம் பூட்டப்பட்டதற்கு வார்டு உறுப்பினர் கௌசல்யா தான் காரணம் மக்கள் குற்றம் சாட்டினர்.