இராஜபாளையம், டிச.1- டிசம்பர் 3 உலக மாற்றுத் திறனாளி கள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க இராஜபாளையம் கிளை சார்பில் தடையில்லா வாழ்வு கோரி மாற்றுத்திற னாளிகளின் சங்கமம் நிகழ்ச்சி நடை பெற்றது. நகரத் தலைவர் பாக்கியராஜ் தலைமை தாங்கினார். நகர பொருளாளர் வீரமணி முன்னிலை வகித்தார். நகரச் செயலாளர் சரவணன் வரவேற்றார். மாநிலத் தலைவர் டி. வில்சன், மாவட்டத் தலைவர் என்.டி.நட ராஜன், மாவட்ட பொருளாளர் பி.அன்புச் செல்வன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.சுந்தரபாண்டி யன் உள்ளிட்டோர் பேசினர். கல்வி, விளையாட்டு மற்றும் சேவை துறையில் சாதனை படைத்த மாற்றுத்திற னாளிகளை இராஜபாளையம் ரோட்டரி கிளப் ஆப் கிங் சிட்டி தலைவர் ராஜவேல், மருத்துவர் ராகுல், சுரேஷ்குமார், பகிர்வு அறக்கட்டளையின் நிறுவனர் செல்வ குமார், வழக்கறிஞர் அழகர், தமுஎகச மாவட்ட நிர்வாகி கனகராஜ், சமூக ஆர்வ லர்கள் பாலமுருகன், மாரியப்பன், சுப்பிர மணியன் உள்ளிட்டோர் பாராட்டி பேசி னர். கிருஷ்ணன் நன்றி கூறினார்.