இராமநாதபுரம் மாவட்டம், கமுதி காடமங்கலம் என்எல்சி சோலாா் நிறுவன பாதுகாவலா்களுக்கு உரிய ஊதியம் ,பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும்.எட்டு மணி நேர வேலையை உறுதிப்படுத்தக் கோரி சிஐடியு இராமநாதபுரம் மாவட்ட முறைசார தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. துணைத் தலைவர் முத்துபாண்டி தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட பொருளாளர் ஆர்.முத்து விஜயன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார் .சங்கத்தின் தலைவர் எஸ்.குணசேகரன், செயலாளர் திருச்செல்வம், பொருளாளர் செந்தில்குமார் மற்றும் ராஜ சிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.