மதுரை, டிச.2- மதுரை மாவட்டம் மேலூர் அருகே நாயக்கர்பட்டி, அரிட்டாபட்டி பகுதிகளில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க விடுத்த ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டு மென்று மேலூர் பகுதி மக்கள் போ ராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஞாயிறன்று மேலூரில் முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகளின் ஆலோசனை கூட்டம் செய லாளர் ரவி தலைமையில் நடைபெற்றது. மேலூரில் இத்திட்டத்தை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது, அரசு இத்திட்டத்தை தடுக்கும் என அமைச்சர் மூர்த்தி அளித்த உறுதியின் பேரில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப் பட்டிருந்தது.
இந்த நிலையில், சட்டமன்ற நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிந்த பிறகு மத்திய -மாநில அரசுகளின் முடிவுகளுக்கு ஏற்ப அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்து ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்படும் என ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.