நாகர்கோவில், டிச. 4- ஒன்றிய அரசு விவசாயி களுக்கு வழங்கி வந்த பிரதம மந்திரியின் விவசாயிகளின் ஊக்க தொகை குமரி மாவட் டத்தில் சுமார் 50 ஆயிரம் பேருக்கு நிறுத்தப்பட்டுள்ள தாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்டக்குழு கூட்டம் துணை தலைவர் என்.முரு கேசன் தலைமையில் நடை பெற்றது. மாநில பொது செயலாளர் சாமிநடராஜன், மாவட்ட செயலாளர் ஆர்.ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஊக்கத்தொகை நிறுத் தப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கவும், புதிதாக பதிவு செய்த விவசாயிகளை பயனாளிக ளாக வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இக்கோரிக்கையை வலி யுறுத்தி 13.12.2022 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி விவசாயிகள் மனு அளிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. திற்பரப்பு இடதுகரை, வலதுகரை கால்வாய் உடைப்புகள், பழுதடைந்த மதகுகள் சரி செய்து தூர்வாரி கடைமடை வரை தண்ணீர் கிடைக்க நடவ டிக்கை மேற்கொள்ள கேட்டும், பட்டணம் கால்வாயில் குலசேகரம் காவல் ஸ்தலம் பகுதியில் உடைந்து போக்குவரத்து நிறுத்தப்படும் நிலை ஏற் படும். தண்ணீர் குடியிருப்புக ளுக்கு சென்று பேரழிவை ஏ்படுத்தும்.எனவே உடைப்பை சரி செய்ய நட வடிக்கை எடுக்க பொதுப் பணித்துறையை கேட்டும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.