வெம்பக்கோட்டை, ஜன.19- சிவகாசி அருகே 2 பட்டாசு ஆலைகளில் ஜனவரி 19 அன்று நிகழ்ந்த வெடி விபத்தில் பெண் உட்பட 3 தொழிலாளிகள் பலி யாகினர். விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள் ளது கனஞ்சாம்பட்டி. இங்கு, சிவ காசியைச் சேர்ந்த மாயக்கண்ணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இதனை விஸ்வநத்தத்தைச் சேர்ந்த கந்த சாமி என்பவர் நடத்தி வருகிறார். இந்த ஆலையானது நாக்பூரில் உள்ள ஒன்றிய அரசின் உரிமம் பெற்று இயங்கி வருகிறது. இதில் 60-க்கும் மேற்பட்ட அறை களில் 150 க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் பேன்சி ரக பட்டாசு தயா ரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வியாழனன்று வழக்கம் போல தொழிலாளர்கள் பட்டாசு களை தயாரித்துக் கொண்டிருந்த னர். அப்போது, வேதிப் பொருளில் ஏற்பட்ட திடீர் உராய்வு காரண மாக திடீரென வெடி விபத்து ஏற் பட்டது. இந்த விபத்தில் சத்திரப் பட்டியைச் சேர்ந்த முனீஸ்வரி என்ற பெண் தொழிலாளி உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பரி தாபமாக உயிரிழந்தனர்.
13 பேர் காயம்
மேலும் இந்த விபத்தில் படந்தா லைச் சேர்ந்த மாரீஸ்வரன் (42), மாரி யப்பன் (42) அன்பின் நகரைத்தைச் சேர்ந்த கருப்பசாமி (26), தங்கராஜ் (49), ஜெயராஜ் (70), தாயில்பட்டி யைச் சேர்ந்த மாரிமுத்து (42), கருப்பசாமி (29), மேலக் கோதை நாச்சியார்புரத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் (42), சுப்பிரமணிய புரத்தைச் சேர்ந்த ராஜ்குமார்(38), சுண்டங்குளத்தைச் சேர்ந்த பாண்டியன்(55), முனீஸ்வரி(38), புதுப்பாளையத்தைச் சேர்ந்த முருகன் (52), செல்லத்தாய் (45), வெம்பக்கோட்டையைச் சேர்ந்த குருசாமி(51) சங்குமுத்துப்பட்டி யைச் சேர்ந்த ஜோதி உள்ளிட்ட 13 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.காயமடைந்த வர்களை நேரில் சந்தித்து அமைச் சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச் சந்திரன் ஆறுதல் கூறினார். தகவலறிந்து சாத்தூர் மற்றும் சிவகாசி பகுதிகளிலிந்து 4 தீய ணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட னர். விபத்து குறித்து வெம்பக கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு பேர் பலியான சம்ப வம் குறித்து விபத்து நடந்த பட்டாசு தொழிற்சாலையை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் நேரில் ஆய்வு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மற்றொரு ஆலையில் விபத்து
விருதுநகர் மாவட்டம், சிவ காசி வேலாயுதபுரம் சாலையைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவ ருக்கு சொந்தமான விஜயா பட்டாசு ஆலையானது, செங்கமலப்பட்டி கிராமத்தில் இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் உள்ள 50க்கும் மேற்பட்ட அறைகளில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த னர். இந்நிலையில், ஒரு அறையில் பேன்சி ரக பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும் பணியில் இரு தொழிலா ளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப் போது மூலப்பொருளில் உராய்வு ஏற்பட்டு திடீரென வேதி மருந்துக் கலவை வெடித்து விபத்து ஏற் பட்டது. இந்த விபத்தில் அந்த அறை முழுவதும் இடிந்து தரைமட்டமா னது. இடிபாடுகளுக்குள் சிக்கிய திருத்தங்கல் மேலமாட வீதியை சேர்ந்த ரவி(58) என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார். மேலும், சிவகாசி எம்ஜிஆர் காலனியைச் சேர்ந்த சாமுவேல் ஜெயராஜ் (48) என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு, சிவ காசி அரசு மருத்துவமனையில் தீக் காய சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். மேலும், தகவல் அறிந்து விரைந்து வந்த சிவகாசி தீயணைப்புப்படை யினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிவாரணம் அறிவித்த முதல்வர்
திண்டுக்கல், விருதுநகரில் ஏற் பட்ட பட்டாசு வெடி விபத்தில் உயி ரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங் கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித் துள்ளார்.