2020ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி கொரோனா பரவல் முதல் பொது முடக்கத்தின் போது ஒட்டுமொத்த நாட்டின் இயக்கமும் நிறுத்தப்பட்டது. அப்போது கோவை, திருப் பூர், ஈரோடு, சேலம் வழித்தடத்தில் இயக்கப்ப டும் பயணிகள் (பாசஞ்சர்) ரயில்கள் நிறுத்தப் பட்டன. இந்த ரயில்கள் இன்னும் இயக்கப்பட வில்லை. இயல்புநிலை படிப்படியாக திரும்பி வரும் நிலையில் விரைவு ரயில்களின் இயக் கம் தொடங்கப்பட்டு உள்ளது. ஆனால். கடந்த 21 மாதங்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டு உள்ள பயணிகள் ரயில் எப்போது இயக்கப்ப டும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. கோவை - சேலம், சேலம் - கோவை, பாலக் காடு - திருச்சி, திருச்சி - பாலக்காடு, கோவை - நாகர்கோவில், நாகர்கோவில் - கோவை ஆகிய பயணிகள் ரயில்கள் பல ஆண்டு காலமாக இந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்க ளுக்கு அன்றாடம் வேலைக்கு அருகாமை ஊர்களுக்குச் சென்று வருவதற்கு பேருத வியாக உள்ளன. குறிப்பாக இந்த மண்டலத் தில் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் உள்ளிட்ட தொழில், வர்த்தக நகரங்களுக்கு பல்லாயிரக்கணக்கான பயணி கள் பருவக் கட்டணம் (சீசன் டிக்கெட்) அடிப்ப டையில் அன்றாடம் வேலைக்குச் சென்று வந்து கொண்டிருந்தனர். இதில் கோவை - நாகர்கோயில், நாகர்கோயில் - கோவை மற் றும் கோவை - சேலம், சேலம் - கோவை பயணிகள் ரயில்கள் இதுவரை இயக்கப்பட வில்லை. அதேசமயம் பாலக்காடு - திருச்சி பயணிகள் ரயில் மட்டும் கொரோனா கால சிறப்பு ரயில் என பெயர் மாற்றம் செய்யப் பட்டு, வழக்கமாக நின்று செல்லக்கூடிய நிறுத் தங்களில் சில இடங்களில் மட்டும் நின்று செல் வதாக மாற்றப்பட்டுள்ளது. எனவே கோவை முதல் ஈரோடு மற்றும் கரூர் வரை இருக்கும் சிற்றூர்களில் இருந்து தொழில், வர்த்தக பணிகளுக்கு அன்றாடம் சென்று வந்த பயணி கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிறப்பு ரயில் என பெயரிடப்பட்டு வழக்கமான கட்டணத்தை விட பல மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பலர் வேலைச் சூழல் காரணமாக தவிர்க்க முடியாமல் இந்த கொள்ளைக் கட்டணத்தை செலுத்தி பயணிக்கும் நிலை உள்ளது. அதே போல் இந்த கட்டண சுமையைத் தாங்க முடி யாத பலர் வேலையையும் இழந்து மாற்றுப் பணிக்கும் அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பின்னணியில் நாளொன்றுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வந்த மேற்கண்ட பயணிகள் ரயில் களை இன்னும் இயக்காமல் முடக்கி வைத் திருப்பது, வணிகரீதியாக கூடுதல் கட்டணம் வசூலிக்கும் உள்நோக்கம் கொண்ட முடிவா கத் தெரிகிறது என ரயில் பயணிகள் கூறுகின்ற னர். தென்னக ரயில்வேயின் மற்ற கோட்டங்க ளில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயில்கள் தற்போது மீண்டும் பழையபடி இயக்கப்படு கின்றன. ஆனால் தொழில், வர்த்தக மையமா கத் திகழும் கோவை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் இந்த பயணிகள் ரயில் களை இயக்காமல் நிறுத்தி வைத்திருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. கடந்த மாதம் இந்த ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக் ்கப்பட்ட பிறகும் கூட இன்னும் இயக்கப்படா மல் ரயில்வே நிர்வாகம் நிறுத்தி வைத்திருக்கி றது. எனவே பல ஆயிரக்கணக்கான மக்கள், சாமானிய தொழிலாளர், அலுவலகப் பணியா ளர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், இந்த மையத்தின் தொழில், வர்த்தக நடவடிக் கைகளுக்கு ஒத்துழைக்கக் கூடிய முறையி லும் உடனடியாக பயணிகள் ரயில்களை ரயில் வே நிர்வாகம் இயக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட 23ஆவது மாநாடு வலியுறுத்திக் கேட் டுக் கொண்டது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரியைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, கொரோனா தடுப்பு விதிமுறை காரணமாகவே பயணி கள் ரயில்கள் இயக்கப்படவில்லை. இயல்பு நிலை திரும்பிய நிலையில் விரைவு ரயில்கள் படிப்படியாக இயக்கப்படுகின்றன. முற்றிலும் முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே பயணிக் கும் நிலையில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்பதிவு இல்லாத பெட்டிகளும் தற்போது இணைக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏராளமானோரிடம் இருந்து வந்து கொண்டிருக்கிறது. ரயில்வே நிர்வாகம் அதையும் பரிசீலித்து வருகிறது. அதே சமயம் தற்போது ஒமைக்ரான் கொரோனா பரவல் காரணமாக மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகி வருகிறது. இந்த நிலையில் பயணி கள் ரயில் எப்போது இயக்கப்படும் என்று உறு தியாக சொல்ல முடியாது. வணிக அடிப்படை யில் லாப நோக்கத்தில் சிறப்பு ரயில் என பெய ரிட்டு பயணிகள் ரயிலை இயக்குவதாக சொல் வது உண்மையல்ல. கொரோனா விதிமுறை தளர்வுக்கு ஏற்ப கட்டாயம் கோவை - சேலம், கோவை - நாகர்கோயில் பயணிகள் ரயில் கள் இயக்கப்படும். ஆனால் எப்போது இயக் கப்படும் என்ற கால விபரத்தை இப்போது சொல்ல முடியாது என்று கூறினார். அதே சம யம் கோவை, திருப்பூர், ஈரோடு வட்டார சிற்றூர் நிறுத்தங்களைச் சேர்ந்த பயணிக ளும் இந்த பயணிகள் ரயில்களின் இயக் கத்தை ஆவலோடு எதிர்பார்த்து இருக்கின்ற னர். எனவே இதற்கு முன்னுரிமை கொடுத்து ரயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் வற்புறுத் துகின்றனர். இவர்களின் கோரிக்கைக்கு செவி மடுக்குமா ரயில்வே நிர்வாகம்? தூயவன், திருப்பூர்.