districts

img

சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி, ஜன.2 தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவி களுக்கு சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அமெரிக்காவைச் சேர்ந்த பிட்ஸ் அன் பைட்ஸ் சைபர் செக்கியூரிட்டி கல்வி (Bits N’ Bytes Cybersecurity Education) தொண்டு நிறுவனத்தின் செயல் அதிகாரி ஹைலா குரு, சைபர் குற்றங்கள் எவ்வாறு நடக்கிறது? இந்த சைபர் குற்றங்களில் இருந்து எவ்வாறு எச்சரிக்கையாக இருப்பது என்பது குறித்தும், மேலும் இணையதளத்தில் குற்றவாளிகள் மூலம் பண இழப்பு ஏதும் ஏற்பட்டால் சைபர்  கிரைம் உதவி எண் 1930 க்கு உடனடி யாக தகவல் அளிப்பது குறித்தும் www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தில் எவ்வாறு புகார் செய்வது என்பது பற்றியும் விழிப்புணர்வு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட சைபர் கிரைம் காகாவல் துணை ஆய்வா ளர் அச்சுதன் கலந்து கொண்டு சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பான விழிப்பு ணர்வு கையேடுகளை மாணவ ,மாணவிக ளுக்கு வழங்கி பேசுகையில் மாணவர்கள் செல்போனில் ஆன்லைன் விளையாட்டை விளையாடும் போது வரும் தேவை இல்லாத லிங்கை, கிளிக் செய்ய வேண்டாம் என்றும் மொபைல் போனை ஆன்லைன் வகுப்புகளில் படிப்பதற்கு மட்டுமே பயன் படுத்த வேண்டும்,

தவறுதலாக மெசேஜ் வந்தால், பெற்றோரிடம் கூறி காவல் நிலை யத்திற்கு தெரியப்படுத்த வேண்டும், இணையதளம் மூலம் நிதி மோசடி, சமூக வலைதளங்களை எப்படி கையாளுவது பற்றியும் பின் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து இணையதளத்தில் புகார் அளிக்க லாம் என்றும் கூறினார். தூத்துக்குடி மாவட்ட சகி ஒருங்கி ணைந்த மையத்தின் நிர்வாகி ஷெலின் ஜார்ஜ் கலந்து கொண்டு பெண்களுக்கு எதி ரான சைபர் குற்றங்கள் எப்படி நடக்கின்றன, அவற்றில் இருந்து தப்பிக்க முன் ஜாக்கிர தையாக இருக்கும் வழிமுறைகள், ஒரு வேளை பாதிப்பு ஏற்பட்டால் எப்படி புகார் தெரிவிப்பது என்று கூறினார்.  நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். முதுகலை ஆசிரியை குயின் ஷீபா வர வேற்புரை ஆற்றினார். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் மரகதவள்ளி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் எடிஃபி சொலு யூசன் பூர்ணிமா ஆறுமுகம், நாகநாதன் குரு, ஸ்வேதா உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி செயலர் ஏபிசிவி சண்முகம், பள்ளி யின் முன்னாள் மாணவர் டாக்டர் முத்துராம லிங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.