திண்டுக்கல், மே 2- சாலை விபத்தில் மரணமடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் ஒன்றியக்குழு உறுப்பி னர் எஸ்.ஜோசப் உடலுக்கு கட்சி யின் தலைவர்கள் மாலையணி வித்து அஞ்சலி செலுத்தினர். திண்டுக்கல் ரெண்டலப்பாறை பகுதியை சேர்ந்தவர் தோழர் எஸ். ஜோசப். மே தினத்தன்று கொடி யேற்று விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ரெட்டியபட்டியிலி ருந்து செல்லும் போது பின் வந்த டாடா ஏ.சி. வாகனம் அவரது இரு சக் கர வாகனத்தில் மோதியது.இதில் தலையில் பலத்தக்காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கி ருந்து மதுரை அரசு மருத்துவ மனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். செவ்வாயன்று அவரது உடல் சொந்த ஊரான ரெண்டலப்பாறை அருகிலுள்ள ரெட்டியபட்டி கல்ல றைத் தோட்டத்திற்கு கொண்டு வரப் பட்டது. அவரது உறவினர்கள், கிராம மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பி னர் என்.பாண்டி, மாவட்டச்செயலா ளர் ஆர்.சச்சிதானந்தம், மூத்த தோழர் பி.கே.கருப்புசாமி, மாவட் டச்செயற்குழு உறுப்பினர்கள் பி. செல்வராஜ், எம்.ராமசாமி, கே. பிரபாகரன், டி.முத்துச்சாமி, ஜி. ராணி, திண்டுக்கல் ஒன்றியச்செய லாளர் சரத்குமார், அஜாய்கோஷ், நகரச்செயலாளர் அரபுமுகமது, மற் றும் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செயலாளர்கள், ஒன்றியக்குழு உறுப்பினரக்ள், நகர்க்குழு உறுப்பினர்கள், கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.