districts

img

மதுரை வார்டு பகுதிகளில் மிகவும் மோசமான நிலையில் சாலைகள்; உடனே சீரமையுங்கள்

மதுரை, அக்.21- மதுரை மாநகராட்சிக்  கூட்டம் அக்டோபர் 21 வெள்ளியன்று மாந கராட்சி கூட்ட அரங்கில் மேயர் இந்திராணி தலைமையில் நடை பெற்றது. ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங், துணை மேயர் தி.நாகரா ஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இந்தக் கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் தங்களது வார்டுகளின் பிரச்சனைகளைப் பட்டியலிட்டனர். தொடர்ந்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் என்.விஜயா, அதிமுக சார்பில் சோலை ராஜா, காங்கிரஸ் சார்பில் கார்த்திகேயன்,   விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்குலாப் ஆகியோர் பேசினர். உறுப்பினர்கள் எழுப்பிய பெரும் பாலான  கேள்விகளுக்கு மாநக ராட்சி ஆணையர்  பதிலளித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கவுன்சிலர் என்.விஜயா பேசு கையில், 94, 95,96 ஆகிய வார்டு களில் சாலைகள் மிகவும் மோச மாக உள்ளன. தற்காலிக மாக ஒட்டுப்போடும் வேலையை யாவது செய்யுங்கள். எதற்கு  மாமன்றம், எதற்கு அதிகாரிகள் என படித்தவர்கள் கேள்வியெ ழுப்புகின்றனர். பலர் தரக்குறை வான வார்த்தைகளால் விமர்சனம் செய்கின்றனர். மோசமான சாலை யில் சென்ற பள்ளி வாகனம் ஒரு புறம் சாய்ந்தவாறு சென்றது. இதை சிலர் படமெடுத்து செல்போன்க ளில் பகிர்ந்தனர். முதலில் சாலை களில் ஒட்டுப்போடும் வேலையை செய்யுங்கள். தண்ணீர் நீரேற்று நிலையங்கள், கழிவு நீரேற்று நிலையங்களில்  மோட்டார் பழுதானால் மாற்று மோட்டார் இல்லை. அனைத்து நிலையங்க ளிலும் மாற்று மோட்டார் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். மாநகராட்சி ஆணையர் வார்டுக்கு ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதாகக் கூறுகிறார். ரூ. 3லட்சம் எப்படியிருக்குமெனத் தெரியவில்லை.

மதுரை பெரியார் பேருந்து நிலைய நுழைவு வாயில் மிகவும் குறுகலாக உள்ளது. இதனால்  பேருந்துகள் வந்து செல்வதில் தொடங்கி, நடந்து செல்லும் பாத சாரிகளும் சிரமத்திற்குள்ளா கின்றனர். இதற்கு மாற்று ஏற்பாடு கள் செய்ய வேண்டும். பெரியார் பேருந்து நிலையத்தில் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு கழிப்பறை வசதி யில்லை. மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுகிறது, வாகன காப்பகங்கள் மேற்கூரை  மழை, வெயிலில் வாகனங்களை நிறுத்தும் நிலை உள்ளது .அவைகளை சரி செய்திட வேண்டும் என்று வலி யுறுத்தினார்.  36-ஆவது வார்டு காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர், எனது வார்டில் சாலைகள் மிகவும் மோச மாக உள்ளது. மக்கள் உண்ணா விரதம் இருக்க புறப்பட்டனர். சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றார். அதிமுக  உறுப்பினர் சோலை ராஜா பேசுகையில், “ மழை நீர் வாய்க்கால்களில் தேங்கியுள்ள மணலை அகற்ற வேண்டும் நெல்பேட்டை-கிரைம்பிராஞ்ச், திருமலைநாயக்கர் மஹால்-விளக்குத்தூண் இடையிலான சாலைகளை சீரமைக்க வேண்டும். சொத்துவரி, வீட்டு வரி உயர்வில் ஒரு வீடு 2,000 சதுர  அடி உள்ளதாக மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது. வீட்டை அளந்த போது 1,700 சதுர அடி தான் உள்ளது. தேவையில்லாமல் 300 சதுர அடிக்கு கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. கூடுதலாக செலுத்தும் தொகை திரும்ப வழங்க உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

மாற்றுப் பணியாளர்கள் இல்லை

ஐந்து மண்டலத் தலைவர்கள் பேசுகையில், சாலைகள் மோசம், துப்புரவுப் பணியாளர்கள் பிரச்ச னை, துப்புரவுப் பணியாளர் விடு முறையில் சென்றால் மாற்றுப் பணி யாளர்கள் இல்லை. நீரேற்று நிலையங்களில் பணியாற்றும் ஊழி யர்களை யார் கண்காணிக் கின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றினாலும் மீண்டும் ஆக்கிர மிப்புகள் முளைக்கிறது. கழிவு நீரும்-மழைநீரும் சேர்ந்ததால் தான் கண்மாய் நிரம்பியுள்ளது. மூன்று நாட்கள் தொடங்கி ஆறு நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வருகிறது. விரிவாக்கப் பகுதிகளில் சாலைகள் மோசமாக உள்ளன. ஆனையூர்-ரிசர்வ்லைன்-மூன்றுமாவடி பகுதிகளில் தெரு விளக்குகள் இல்லை. விளக்கு களை பிட்டிங்குகளில் பொருத்து வதில் பிரச்சனை உள்ளது. விளக்கு களில் போதுமான வெளிச்சம் இல்லை. கோச்சடையில் உள்ள மயானப் பாதையை சீரமைக்க வேண்டும். வார்டுகளில் கொசு மருந்து அடிக்கும் விவரங்களை பட்டியல்களாக வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பினர். 

ஒப்பந்த முறையைக் கைவிடுக 

ஒட்டுமொத்தத்தில் மதுரை மாநகராட்சி தாம் பொறுப்பேற்றுச் செய்ய வேண்டிய பணிகளை ஒப்பந்தமுறைக்கு மாற்றியதால் தான் பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியவில்லை. மாநகராட்சி நிர்வாகம் முதலில் ஒப்பந்த முறை யைக் கைவிட்டு தேவையான பணி யாளர்களை நியமித்து பணி களை நிறைவேற்றுவது தான் பொருத்தமாகவும்.  தனியார் மயம், ஒப்பந்த மயம் என்ற நிலை தொடர்ந்தால்  “மாநகராட்சிக்கு சென்றால் கோரிக்கைகள் நிறை வேறும்”  என்ற மக்கள் நம்பிக்கை யைப் பெறுவது கடினம்.

தீர்மானத்தை நிறைவேற்ற எதிர்ப்பு

கூட்டத்தில் ஐந்து உதவிப் பொறியாளர்களை பொறியியல் பிரிவில் காலியாக உள்ள உதவிச் செயற்பொறியாளர் பணி யிடத்திற்கு பதவி உயர்வு வழங்கும் தீர்மானத்தை மேயர் வாசித்தார். இதற்கு அதிமுக உறுப்பி னர் சோலை ராஜா, திமுக உறுப்பி னர் நாகநாதன் கடும் எதிர்ப்புத் தெரி வித்தனர். நியாயமான முறையில் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி  உயர்வு வழங்க வேண்டும். தாங்கள்  கொடுத்துள்ள பட்டியல் சரியானது அல்ல. தீர்மானத்தை நிறை வேற்றக்கூடாது என்றார். இதற்கு பதிலளித்த மேயர், “அறிவித் தது அறிவித்ததாக இருக்கட்டும். அடுத்த முறை சரியாக பார்த்துக் கொள்வோம் எனக் கூறி தீர்மா னத்தை “வெயிட்டிங்கில்” வைப்ப தாகக் கூறினார். வெயிட்டிங் என்றால்  இதே கூட்டத்தில் மீண்டும் கொண்டுவரக்கூடாது. கடைசியில் தீர்மானம் நிறைவேறவில்லை.