districts

img

சாம்சங் ஊழியர்களுக்கு ஆதரவுத் தெரிவித்து சிஐடியு மறியல்

நாகர்கோவில், அக். 1- சாம்சங் நிறுவன தொழிலாளர் சங்கம் அமைக்க உரிமை கேட்டு நடத்தி வரும் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஒருமைப்பாடு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் அக்.1 செவ்வாயன்று சிஐடியு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. குமரி மாவட்ட சி.ஐ.டி.யு வினர் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு குமரி மாவட்ட செயலாளர் கே. தங்கமோகனன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் எம்.ஐடா ஹெலன், மாவட்ட பொருளாளர் சித்ரா, மாநில குழு உறுப்பினர்கள் பி.இந்திரா, கேபி.பெருமாள், வி.சந்திரகலா, ஜெ.ஆலவர்பிரைட், சி.சுரேஷ்குமார், எஸ்.அந்தோணி உள்ளிட்டோர் பேசினர். இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட பெண்கள் 27 பேர் உட்பட 110 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி நெல்லை வண்ணார ப்பேட்டையிலும் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிஐடியு  மாவட்ட செயலாளர் ஆர்.முருகன் தலைமை தாங்கினார், பொருளாளர் ராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் க.ஸ்ரீராம், சிபிஎம் மாநில குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன் சிஐடியு மாநில குழு உறுப்பினர்  ஆர்.மோகன், சி.ஐ.டியு மாவட்டத் தலைவர் பீர் முகம்மதுஷா, மாவட்ட  தலைவர்கள் எம்.சுடலைராஜ், காமராஜ், சிஐடியு மாவட்ட இணை செயலாளர்கள் கந்தசாமி, மாரிச்செல்வம், சுரேஷ், ஆகியோர் பேசினர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 102  பேர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு சிஐடியு சார்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு மாவட்ட தலைவர் ஆர்.பேச்சி முத்து தலைமை வகித்தார். சிஐடியு மாநில செயலாளர் ஆர். ரசல், மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, மாவட்ட நிர்வாகிகள்  உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து  மறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.  தென்காசி தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிஐடியுமாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் லெனின் குமார், வன்னிய பெருமாள,  ஐயப்பன், சின்னசாமி, ரத்தினம் பட்ட முத்து, முத்துலட்சுமி,   சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உச்சிமாகாளி,  குணசீலன், கட்டுமான சங்க மாவட்ட  நிர்வாகிகள், பீடி சங்க மாவட்ட நிர்வாகிகள் போக்குவரத்து சங்க மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 13 பெண்கள் உட்பட 63 பேர் கைது செய்யப்பட்டனர்.