districts

img

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் விழா

திருவில்லிபுத்தூர்,ஏப்.6- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் . திருக்கல்யாண உற்சவம்  கடந்த மார்ச் 28 அன்று   கொடியேற்றத்துடன் துவங்கியது  கடந்த 8 நாட்களாக  ஆண்டாள் ரங்கமன்னார் சுவாமிகள் காலையில் மண்டபம் எழுந்தருளல், இரவு  பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா சிறப்பாக நடைபெற்றது. விழாவின் 9 ஆம் திரு நாளான வியா ழனன்று ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரெங்கமன்னார் திருக் கல்யாண உற்சவம் ஆடிப்பூர மண்டபத்தில் நடை பெற்றது. திருக்கோவில் அர்ச்சகர் பாலாஜி பட்டர் திருமாங்கல்யத்தை ஆண்டாளுக்கு அணிவித்தார். இந்நிகழ்ச்சிக்கு மதுரை, சிவகங்கை, திரு நெல்வேலி, தூத்துக்குடி ,தேனி நாகர்கோயில்  மற்றும் ஆந்திராவில் இருந்து பல்லாயிரக்கணக் கான பக்தர்கள் வருகை தந்து பங்கேற்றனர்.  திருக் கல்யாணத்தில்  பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக் தர்களுக்கு கல்யாண விருந்து வழங்கப்பட்டது.