districts

img

ஊடகங்களில் இடம்பெற பாஜக விஷமத்தனம்

கோவை, பிப்.7- ஊடகங்களில் இடம்பெற வேண்டும் என்பதற்காகவே பாஜக  விஷமத்தனமான செய்திகளை வெளியிடுவதாக இந்து அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு குற்றஞ் சாட்டினார். கோவையின் முக்கிய அடையா ளங்களில் ஒன்றாக பேரூர் பட்டீஸ் வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கல்யாணி யானை பராம ரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலை யில், பேரூர் கல்யாணி யானை குளிக் கவும், நடைபயிற்சி மேற்கொள்ள வும், இந்து அறநிலையத்துறை சார்பில் ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டது. இதையடுத்து,  கோவிலுக்கு அடுத்து அங்காளம்மன்  கோவில் பின் பகுதியில் கோவி லுக்கு சொந்தமான 5.5 ஏக்கர் நிலப் பரப்பு தேர்வு செய்யப்பட்டது. இந்த  பகுதியில் யானை குளியல் தொட்டி  4 அடி உயரத்திற்கு 1,20,000 லிட்டர் கள் கொள்ளளவில் அமைக்கப் பட்டது. யானை குளியல் தொட்டி 10  மீட்டர் அகலம், 10 மீட்டர் நீளம்,  1.8  மீட்டர் உயரம். யானை நடைப்பாதை  300 மீட்டர் நீளம், 5 மீட்டர் அகலம், யானை செல்லும் பாதையின் சாய்வு  தளம் 12.40 மீட்டர் நீளம், 420 மீட்டர்  அகலம் என குளியல் தொட்டி கட்டப் பட்டுள்ளது. இந்த யானை குளியல் தொட்டியை செவ்வாயன்று இந்து  சமய அறநிலையத் துறை அமைச் சர் பி.கே.சேகர்பாபு திறந்து வைத்தார். அதன் பின்னர் யானை குளியல் தொட்டியில் இறங்கி  நீரில் விளையாடி ஆனந்த குளியல் போட்டது. இதனை தொடர்ந்து பேரூர் தமிழ் கல்லூரியில், பழனி,  திருச்செந்தூர், மதுரை, திரு வண்ணாமலை, ஸ்ரீரங்கம், திரு வல்லிக்கேணி ஆகிய இடங்களில் உள்ள கோவில்களில்  அர்ச்சகர்  மற்றும் ஓதுவார் பள்ளியில்  பயிற்சி  பெற்ற 84  மாணவர்களுக்கு  சாந்த லிங்க அடிகளார், மருத்தாச்சல அடிகளார், குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினர்.   இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் கலந்து கொண்டு  சிவ தீட்சை வழங்கப்பட்டதற் கான சான்றிதழ்களை வழங்கினார்.  நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்  கிராந்தி குமார் பாடி மற்றும்  கோவில் நிர்வாகத்தினர் பலர்  கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து அவர்  செய்தியாளர்களிடம் கூறுகையில், 84 அர்ச்சகர்கள் மற்றும் ஓதுவார் களுக்கு தீட்சிதை அளித்தது மகிழ்ச்சி யளிக்கிறது. கடந்த 2006ஆம்  ஆண்டில் முன்னாள் முதலமைச்சர்  கலைஞர் அர்ச்சகர் பயிற்சி  பள்ளிகள் துவக்க அரசாணை வெளி யிட்டார். பின்னர் 2007ஆம் ஆண்டு  அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் துவங் கப்பட்டது. கடந்த காலங்களில் பள்ளி கள் மாணவர்கள் பயிற்சி பெற தரம்  இல்லாத நிலை இருந்தது.  இந்த பள்ளிகளை மேம்படுத் தவும், புதிய பள்ளிகள் துவக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டதை தொடர்ந்து, 5 நிலையில் பயிற்சி பெற  15 பள்ளிகள் துவங்கப்பட்டது. அப் பள்ளிகளில் 210 பேர் பயிற்சி பெற்று  வருகின்றனர். எங்கும் தமிழ் மணம் மகிழவும்,  ஆன்மிகத்தில் தமிழகம் முதன்மை பெறவும் இந்த நிகழ்ச்சி உதாரணமாக உள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை யின் கீழ் உள்ள 27 திருக்கோவிலில் 29 யானைகள் பராமரிக்கப்படுகிறது. அந்த யானைகளுக்கு குளியல் தொட்டிகள், நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்து சமய  அறநிலையத் துறையில் இருந்த  தொய்வான நிலையை அகற்றி, பக்தர்களின் அடிப்படை தேவை களை அரசு நிறைவேற்றி வருகிறது.  ஆனால், ஊடகங்களில் வர வேண்டும் என்பதற்காக பாஜக வின் வானதி சீனிவாசன் விஷமத்தன மான செய்திகளை வெளியிடுவது   தான் அவரது வாடிக்கையாக உள்ளது. வெளிநாட்டில் இருப்ப வர்களும் பாராட்டும் வகையில் சிறப்பாக கும்பாபிஷேகம் நடந்தது. அதில் கரும்புள்ளி ஏற்படுத்த வேண்டும் என அர்த்தமற்ற செய்தியை வெளியிட்டது மிகவும் வருத்தமளிக்கிறது.  அனைவரும் சமம் என்ற நிலை யை உருவாக்கியதாலும் திருக் கோவிலை வைத்து வருமானம் பார்ப்பவர்களை முடக்கியதாலும், தேவையற்ற செய்திகள் வெளி யிடப்பட்டு வருகிறது. மேலும், பழநிக்கு பெருந்திட்ட வரைவு தயார்  செய்யப்பட்டுள்ளது. அதற்கு முதல மைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.   மருதமலை கோவில் அறங் காவலர் விரைவில் நியமனம் செய் யப்படுவார். 17 திருக்கோவில் களுக்கு அறங்காவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  விரைவில் அனைத்து கோவில்களிலும் நிய மனம் செய்யப்படுவார்கள். கோவில் களில் சிறப்பு கட்டணம் ரத்து செய்யும்  நிலையில், பூஜை உள்ளிட்டவை பாதிக்காத நிலையில் செய்யப் படும். சிறப்பு கட்டணத்தை படிப்படி யாக குறைக்க நடவடிக்கை எடுக்கப் படும். மருதமலை கோவிலில் லிஃப்ட்  அமைக்க டெண்டர் முடிந்துள்ளது. அடுத்த மாதம் பணிகள் துவக்கப் படும், என்றார்.