தென்காசி, நவ. 17 தென்காசி நகராட்சியில் பஜார் பகுதிகளில் ஆக்கிர மிப்புகள்கடந்த இரண்டு நாட்களாக அகற்றப்பட்டு வருகிறது.இதை வியாபா ரிகள் நலச் சங்கமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தை கள் கட்சி உள்ளிட்ட சர்வகட்சி யினரும் வரவேற்கும் அதே வேளையில் கடைகளின் முன் கழிவுநீரோடைகளின் மேல் போடப்பட்டிருந்த சிமெண்ட் சிலாப்புகள் தேவையில்லாமல் இடிக்கப் பட்டுள்ளதையும் அதனால் சிறு குறு வியாபாரிகளுக்கு மிகுந்த பொருள் செலவு ஏற்பட்டுள்ளதையும் கண் டிக்கிறது.வியாழனன்று காலையில் சிபிஎம், சிபிஐ, வி சி க மற்றும் வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகிகள் நக ராட்சி ஆணையாளரைச் சந்தித்து மனு கொடுத்து வியாபாரிகளின் பாதிப்பை சரிசெய்ய வேண்டினர். விசிக மாவட்ட செயலா ளர் டேனி அருள் சிங்,சித்திக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் மாரியப்பன், இந்திய கம்யூனிஸ் கட்சி நகர செயலாளர் கணேசன், சிஐடியு பொறுப்பாளர் கிருஷ்ணன்,வியாபாரிகள் நலச் சங்க நிர்வாகிகள் மாரி யப்பன், முகைதீன் அழகு ராஜா உள்ளிட்ட திரளான வர்கள் கலந்து கொண்ட னர்.