புதுக்கோட்டை, ஜன.30- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டியில் ஞாயிறன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 527 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க 242 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. காளைகளை அடக்கியதில் மாடு பிடி வீரர்கள் 21 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு அங்கு முகாமிட்டு இருந்த மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். 150 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.