புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே அம்மாபட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் சேக் அப்துல்லா தலைமை வகித்தார். மருத்துவ தகுதி அடிப்படையில் 35 யூனிட்கள் இரத்தம் கொடையாக பெறப்பட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இரத்தம் வழங்கிய அனைவருக்கும் மருத்துவர் ராதாகிருஷ்ணன் சான்றிதழ்களை வழங்கினார்.