districts

img

20 ஆண்டுகளாக சாலை வசதியின்றி தவிக்கும் கூத்தாடிவயல் கிராம மக்கள்

அறந்தாங்கி,  ஜூலை 6 - கூத்தாடிவயல் கிரா மத்திற்குச் செல்லக்கூடிய சாலை குண்டும் குழியுமாக  உள்ளதாக புகார் கூறப் படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கூத்தாடிவயல் கிரா மத்தில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்தப் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தார்ச்சாலை  அமைக்கப்பட்டது. அந்த சாலை, தற்போது குண்டும் குழியுமாக இருப்பதால் இரு  சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்க ளில் செல்ல முடியவில்லை. அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு செல்ல இந்தச் சாலையை கடந்துதான் மாணவர்கள் செல்ல  வேண்டிய நிலை உள்ளது. இதனால் மாண வர்கள் கீழே விழுந்து விபத்து ஏற்படும் நிலை இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் பெய்த மழையினால் சாலையில் நீர் தேங்கி கிடக்கிறது. இதனால் சில பள்ளி மாணவ-மாணவிகள் விபத்தில் சிக்கிய நிலையில், அவர்கள் அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதுகுறித்து சம்பந்தப்பட்ட அரசு அதி காரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் எந்த  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். இல்லையெனில், மிகப்பெரிய போராட்டம்  நடத்தப்படும் என அப்பகுதி மக்கள் தெரி விக்கின்றனர்.