நாமக்கல், ஜூலை 17- ஆக்கிரமிக்கப்பட்ட நாமக்கல் மாவட்டம், எலச்சிபா ளையம் அகரம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.
10 சென்ட்டுக்கு மேல் உள்ள நிலத்தில் மாவட்ட கிளை நூலகம் செயல் பட்டு வந்தது. 30 வருடத்திற்கும் மேலாக நூலகம் இயங்கி வந்த நிலையில், கடந்த பத்து வருடங்க ளுக்கு முன்பு கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்ட நிலையில், புதிய கட்டடம் அமைக்கும் வரையில் வேறு இடத் தில் செயல்படுவது என சிறிய இடத் தில் இடமாற்றம் செய்யப்பட்டது. அரசு நிலத்தை மீட்கக்கோரி கழுத்தில் கோரிக்கை அட்டையை மாட்டி சிபிஎம் கவுன்சிலர் நூதன முறை யில் மனு அளித்த சம்பவம் வெகு மக்களின் கவனத்தை ஈர்த்துள் ளது.
இந்நிலையில், ஏற்கனவே உள்ள இடத்தில் புதிய நூலகம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து அதிகாரிகளிடம் வலியு றுத்தினர். இதனைத்தொடர்ந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பி னர் சின்ராஜ் பொது நிதியில் ரூ. 15 லட்சமும், மாவட்ட கிளை மூலமாக ரூ.17 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பின்னர், நூலகம் கட்டுவதற் கான பூமி பூஜை கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் போடப்பட் டது. ஆயத்தப் பணிகளை மேற் கொண்ட போது இந்த நிலம் தனி யார் பெயரில் பட்டாவாக மாற்றப் பட்டு இருப்பதை கண்டு பொது மக்களோடு சேர்ந்து அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து, எலச்சிபாளை யம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கவுன்சிலர் சுரேஷ், இது குறித்து மாவட்ட ஆட்சியர், வரு வாய் கோட்டாட்சியர், வட்டாட்சி யர் என பல்வேறு துறை அதிகாரி களிடம் அரசு நிலத்தை மீட்டு நூல கம் அமைக்க வேண்டும் என மனு அளித்து வலியுறுத்தி வந்தார். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், எலச்சிபாளை யத்தில் நடைபெற்ற மக்களை தேடி முதல்வர் திட்ட முகாம் நடைபெரும் இடத்திற்கு சென்ற சிபிஎம் கவுன் சிலர் சுரேஷ், கோரிக்கை அட் டையை கழுத்தி மாட்டிக்கொண்டு தனி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார். மனுவை பெற்ற அதிகாரிகளும் உடனடியாக தலை யீடு செய்வதாக உறுதி அளித்த னர்.
முன்னதாக அரசு நிலத்தை மீட்க வேண்டும் என நூதனமுறையில் மார்க்சிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் முதல்வர் திட்ட முகாமில் பங்கேற்ற சம்பவம் அப்பகுதியில் இருந்த அதி காரிகள் மற்றும் மக்களின் கவ னத்தை வெகுவாக ஈர்த்தது.