districts

img

பிரதமர் மோடிக்கு 108 கேள்விகள்

தமிழ்நாடு பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எழுதிய ‘மன் கீ பாத்’ மனதின் குரலுக்கு ஓர் இந்திய குடிமகனின் 108 கேள்வி கள் என்ற புத்தகம் நாகர்கோவிலில்  வெளியிடப்பட்டது.

நாகர்கோவிலில் ஞாயிறன்று (மார்ச் 10) நடந்த புத்தக வெளி யீட்டு விழாவில் மாநில சிறுபான்மை யினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் புத்தகத்தை வெளி யிட்டார். மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்,  கிள்ளி யூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி. பெல்லார்மின், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று வாழ்த்திப் பேசினர்.

அமைச்சர் மனோ தங்கராஜ், தான் எழுதிய புத்தகம் பற்றி செய்தி யாளர்களிடம் தெரிவித்ததாவது; இந்திய பிரதமர்களில் செய்தி யாளர்களை சந்திக்காத, செய்தி யாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்காத ஒரே இந்திய பிரதமர் மோடி மட்டுமே. மான் கீ பாத் - மனதின் குரல் என்பது ஒரு வழிப் பாதை போன்றது. மோடி மட்டுமே அவருக்கு மனதில் தோன்றியதை எல்லாம் பேசிக்கொண்டு இருப் பார். பார்ப்போர் எந்த கேள்வியும் கேட்க முடியாது. இதனால்தான், ஓர்  இந்தியக் குடிமகனின் 108 கேள்வி கள் என நான் கேள்வியை இந்த புத்தகம் மூலம் எழுப்பியுள்ளேன்.

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடக்குமா என்ற கேள்வி பாமர மக்களுக்கே ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தில் மூன்று அதி காரிகள் இருந்த இடத்தில் இப் போது ஒரே ஒருவர் மட்டுமே இருக் கிறார். தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீர் ராஜினாமா எழுப்பும் கேள்விகள் பல உள்ளன. இவ ருக்கு இன்னும் பல ஆண்டுகள் பதவி கால அவகாசம் இருக்கும் நிலையில், அருண் கோயல் மிரட்டப் பட்டாரா? என்ற கேள்வி நாட்டு மக்க ளுக்கு எழுந்துள்ளது. மேலும், தேர்தல் உரிய காலத்தில் நடக்குமா என்ற சந்தேகம், இந்திய மக்கள்  அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. 

மன் கீ பாத் மோடியின் மன தில் எழும் உணர்வுகளை வலியுறு த்தும் அவரது சிந்தனைகள், மதம், உணவு என்ற உணர்வில் வெளிப் படுத்தும் நிகழ்ச்சியை நானே பல முறை பார்த்திருக்கிறேன். அதன் அடிப்படையில்தான் நான் இந்த புத்தகத்தை எழுதியுள்ளேன். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.