நாகப்பட்டினம், டிச.7 - நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா கீழையூர் ஒன்றியம் வேளாங்கண்ணி பேரூராட்சி ஆரியநாட்டு தெரு பகுதியில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நியாய விலை கடை கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா புதனன்று நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம் பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் செலவில் இக்கட்டிடம் கட்டப்பட இருக்கிறது. இதற்கான அடிக்கல்லை கீழ்வேளூர் எம்எல்ஏ வி.பி.நாகைமாலி நாட்டினார். இவ்விழாவில் வேளாங் கண்ணி பேரூராட்சி துணைத் தலைவர் தாமஸ் ஆல்வா எடி சன், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.