திருவாரூர், ஆக.18- நாடு முழுவதும் கார்ப்பரேட் நிறு வனங்களால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளிலிருந்து இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான முயற்சியை ஐக்கிய விவசாயிகள் முன்னணி மேற்கொண்டுள்ளது
இதனொரு பகுதியாக நாடு முழு வதும் கருத்தரங்குகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, தமிழ்நாட்டில் திரு வாரூர், செங்கல்பட்டு, சேலம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங் களில் சனிக்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.
ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் டெல்டா மாவட்ட விவசாயி கள் பங்கேற்ற கருத்தரங்கம் திரு வாரூர் மாவட்டம் ஏவிஎஸ் திரு மண மஹாலில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலை வரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பி னருமான கே.உலகநாதன் தலை மை வகித்தார். தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநில பொதுச் செய லாளர் சாமி.நடராஜன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவரும், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னதுரை, தமிழ்நாடு விவசாயத் தொழிலா ளர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரும், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான கே.மாரிமுத்து ஆகியோர் கருத்து ரை ஆற்றினர். நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருவாரூர் மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி, செயலாளர் எம்.சேகர், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.கந்த சாமி மற்றும் திருவாரூர், நாகப் பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சா வூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் தெரிவித்ததாவது:
இந்தியா முழுவதும் 1991 இல் அறிமுகப் படுத்தப்பட்ட உலகமய, தாராளமய பொருளா தாரக் கொள்கைகளால் இயற்கை வளங்கள் முழுவதும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதனால் தங்கு தடையின்றி இயற்கை வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை அடித்துக் கொண்டி ருக்கின்றன. இதன் விளைவாக பருவநிலை மாற்றங்கள் ஏற்பட்டு, நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு, விவசாயம் செய்வதற்கும், குடிப்பதற்கும் நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.
2030 ஆம் ஆண்டில் சென்னை, நாகை, திருவாரூர் மாவட்டத்தில் கடல் நீர் உட்புகும் அபாயம் உள்ளது. காவிரி டெல்டா மாவட்டங் களில் உள்ள நீர் நிலைகளை ஆழப்படுத்தி கரை களை பலப்படுத்த வேண்டும். 1600-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய குளங்களையும் ஏரி களையும் தூர்வாரி புனரமைத்து செப்பனிட்டாலே திருவாரூர், நாகை, தஞ்சை மாவட்டங்களில் நிலத்தை நீர் மட்டத்தை பாது காத்து, கடல் நீர் உட்புகுவதை தடுக்க முடியும்.
இதற்கான நடவடிக்கையை அறிவியல் பூர்வமாக மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். அரசாங்கமே நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டிக் கொண்டிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, விழுப்புரம் பேருந்து நிலையம், சேலம் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளை அரசாங்கமே ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டி வருகிறது. ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய நீர் நிலைகளை பாதுகாப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிளாஸ்டிக் உற்பத்தி செய்யக்கூடிய நிறு வனங்களை அரசாங்கம் மூடினால் பிளாஸ்டிக்கை பொதுமக்கள் பயன்படுத்த மாட்டார்கள். சாதாரண மனிதன் சுற்றுச்சூழலை பாதுகாப்பதை விட, அரசாங்கம் அதற்கான நட வடிக்கைகளை எடுக்க வேண்டும். சுற்றுச் சூழல் தொடர்பான பாடத் திட்டங்களை இளம் வயதினருக்கு அறிமுகப்படுத்தி, சுற்றுச்சூழல் தொடர்பான எண்ணங்களை மாணவர்களுக்கு வளர்க்க வேண்டும்.
தற்போது மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள பாஜக அரசு முழுக்க முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான அரசாக செயல்படுகிறது. சுற்றுச்சூழல், இயற்கை வளங்களை பெரிய அளவில் கொள்ளை அடிப்பது பெரிய பெரிய கார்ப்பரேட் நிறு வனங்கள்தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.