மன்னார்குடி, மார்ச் 21- திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் வாலி பர் சங்கம் சார்பில் போதைக்கு எதிரான ஒரு கோடி கையெ ழுத்து இயக்கம் நடை பெற்றது. நிகழ்விற்கு ஒன்றியத் தலைவர் சதீஷ் தலைமை வகித்தார். கோட்டூர் காவல் ஆய்வாளர் சிவகுமார் முதல் கையெழுத்தினை பதிவு செய்தார். கோட்டூர் ஒன்றி யக் குழு தலைவர் மணி மேகலை முருகேசன், ஒன் றிய கவுன்சிலர் மாரியப்பன், ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்தன், சிபிஎம் ஒன்றி யச் செயலாளர் சண்முக வேல் மற்றும் வாலிபர் சங்க மாவட்ட, ஒன்றிய தலைவர் கள், பொதுமக்கள், மாண வர்கள் கையெழுத்திட்டனர்.