திருவள்ளூர், டிச.23- திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக் கோட்டை அருகில் உள்ள தண்டலம்பஜாரில் இந்தியன் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு வங்கிக்கு வரும் வாடிக்கை யாளர்களை கிளையின் உதவி மேலாளர் மரியாதை குறைவாக நடத்துகிறார். நூறு நாள் வேலை செய்யும் பணியாளர்கள் தங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க வரும் போது மிகவும் அநாகரிகமான வார்த்தைகளில் பேசுகிறார். அதிகாரியின் இந்த நடவடிக்கையை வாலிபர் சங்கம் கண்டித்துள்ளது. மேலும் பழுதடைந்த ஏடிஎம் இயந்திரத்தை சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தி வெள்ளியன்று (டிச 23) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வங்கியை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இந்த நிலையில் வியாழனன்று (டிச 22) வங்கி அதிகாரிகள், வாலிபர் சங்கத்தினருடன் பேச்சு நடத்தினர்.அப்போது இனி வாடிக்கையாளர்களை தரக்குறைவாக பேசுவது தவிர்க்கப்பட்டு, நல்ல சேவையை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஏடிஎம் இயந்திரம் அடுத்த இரண்டு நாட்களில் சரிசெய்யப்படும் எனவும் மேலும் புதிய ஏடிஎம் இயந்திரம் விரைவில் பொருத் தப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப் பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.மதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் என்.கங்காதரன், வாலிபர் சங்கத்தின் பொன்னேரி பகுதி குழு நிர்வாகி கள் ஜெகன், வெங்கட் , ஊத்துக்கோட்டை பகுதி செயலாளர் சிவநேசன், பகுதி நிர்வாகி கள் ஆசாத், முகேஷ் ஆகியோர் பங்கேற் றனர்.