திருவள்ளூர்,பிப்.11- பொன்னேரி அருகே பாக்கம் கிராமத்தில் வசிப்பவர் வசந்த். இவரது இளைய மகன் மூன்றரை வயதான மகன் சஞ்சீஸ்வரன்.வெள்ளியன்று (பிப்-11) காலையில் வீட்டிலிருந்த தேங்காயினை சாப்பிடும் போது தேங்காய் துண்டொன்று தொண்டையில் சிக்கிக் கொண்டது. இதனால் குழந்தை மூச்சு திணறி துடிப்பதை கண்டு உறவினர்கள் பழவேற்காடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் குழந்தை மூச்சுத் திணறி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.