districts

img

கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அடுக்குமாடி: பாஜக மாநில நிர்வாகியிடமிருந்து மீட்பு

திருவண்ணாமலை, மார்ச் 18- திருவண்ணாமலை கோயிலுக்கு சொந்தமான இடத்தை பாஜக பிரமுகர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து  வைத்திருந்தார். அதனை காவல்துறையினர் வரு வாய்த் துறையினர் முன்னிலையில் மீட்டனர். திருவண்ணாமலை கோயில் அம்மன்  கோபுரம் அருகே அம்மணி  அம்மன் மடம் இருந்துள்ளது. அதனை வழக்கறிஞ ரும், பாஜக கோயில் மேம்பாட்டு ஆன்மீக பிரிவின்  மாநில துணைத்தலைவரு மான சங்கர் என்பவர் ஆக்கிரமித்து வீடு கட்டியி ருந்தார். இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக  நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ள இடத்தை அகற்ற  வேண்டும் என உயர் நீதி மன்றம் ஆணை பிறப்பித் தது. அதனடிப்படையில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் குமரேசன் தலைமையில் செயல்முறை நடவடிக்கை என்ற ரீதியில், திருக்கோயில் அசையாச் சொத்து ஆக்கிரமிப்பு 22/1959, 78, 79 பிரிவின் கீழ் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்பு அகற்றப் படும் என ஆக்கிரமிப்பாளர்க ளுக்கு நோட்டீஸ் வழங்கப் பட்டது. பின்னர் சனிக்கிழமை கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சவுந்தர் ராஜன் தலைமையில் 2  துணைக்காவல் கண்காணிப்பாளர்கள், 250 காவல்துறையினர், வருவாய்த் துறையினர், கோவில் ஊழியர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள், ஆக்கிரமிப்பை அகற்றி கோவிலுக்கு சொந்தமான சுமார் 23 ஆயிரத்து 800 சதுர  அடி நிலத்தை மீட்டனர்.