districts

img

தில்லி போராட்டத்தில் பங்கேற்க கும்பகோணத்தில் இருந்து மாற்றுத்திறனாளிகள் பயணம்

கும்பகோணம், ஜூலை 8-

    புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற  கட்டிடத்தின் முன்பு ஜூலை 10 (திங்கட் கிழமை) அன்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி தர்ணா போராட்டம் நடைபெறு கிறது.

    இந்தப் போராட்டத்தில் பங்கேற்க, கும்பகோணத்தில் இருந்து சென்னை வழியாக ரயில் மூலம் தில்லி செல்வ தற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதனை யடுத்து கும்பகோணம் ரயில் நிலையத் தில் மாநில செயற்குழு உறுப்பி னர் பழ.அன்புமணி மற்றும் மாற்றுத் திறனாளிகள் சங்க பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் உள்பட 37 பேர் தில்லி  புறப்பட்டுச் சென்றனர். தோழமை சங்கத்தினர் வாழ்த்தி வழி அனுப்பி னர்.