மயிலாடுதுறை, ஏப்.21-
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அருகே பரசலூர் செல்லப்பர் கோயிலுக்கு உட்பட்ட சுந்தரேஸ்வரர் சுவாமி கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வியாழனன்று மீட்டனர்.
பரசலூர் கிராமத்தில் இந்து சமய அறநிலைத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள செல்லப்பர் வகையறா கோயிலுக்கு உட்பட்ட சுந்தரேஸ் வர்சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான மேல கட்டளை கிராமத்தில் 4.75 ஏக்கர் புஞ்சை நிலம் தனி நபர்களால் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பில் இருந்து வந்துள் ளது.
இந்நிலையில், தனி நபர்களால் ஆக்கிரமிப்பில் இருந்த நிலங்களை மீட்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை தனி வட்டாட் சியர் து.விஜயராகவன் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் முரு கன், செயல் அலுவலர் உமேஷ் குமார், ஆய்வாளர்கள் கா.கண்ண தாசன், எம்.சதீஷ் ஆகியோர் தனி நபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான சுமார் ரூ.2 கோடி மதிப்பி லான 4.27 ஏக்கர் நிலத்தை மீட்கப்பட்டு அறிவிப்புப் பலகை வைத்தனர்.