திருச்சிராப்பள்ளி, அக்.12 - திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத் தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, சத்துணவு திட்டத்தின்கீழ் மாவட்ட அளவி லான சிறு தானிய உணவு விழிப்புணர்வு திருவிழா நடைபெற்றது. இதில் அமைக்கப் பட்ட சிறுதானிய உணவு கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தொடங்கி வைத்து பார்வையிட்டார். பள்ளி மாணவ-மாணவியர்களுக்கான வினாடி வினா போட்டி, மாவட்ட அளவிலான விழிப்புணர்வு ஊர்வலம், சிறுதானிய சமை யல் போட்டி, சிறுதானிய கண்காட்சி நடைபெற அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 8,9 மற்றும் 10 ஆம் வகுப்பு வரை உயர்கல்வி பயிலும் மாணவ-மாணவியர்களிடையே சிறுதானியங் கள் குறித்து வினாடி-வினா போட்டியில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களில் வென்ற மாணவ-மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகளை வழங்கி பாராட்டினார். தொடர்ந்து, பள்ளி சத்து ணவு மைய அமைப்பாளர்கள், சமையலர்கள் மற்றும் சமை யல் உதவியாளர்களுக்கு நடந்த மாவட்ட அளவில் சிறு தானிய சமையல் போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த சத்துணவு பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகள் வழங்கினார். மேலும் சிறுதானியங்களின் அவசியம் குறித்தான புகைப்படங்கள் பேனர்கள், உணவு வகைகள், மூலப்பொருட்கள் ஆகியவற்றை பொதுமக்கள் காணும் வகையில் திருச்சி ராப்பள்ளி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள் பிரதான நுழைவு பகுதியில் சிறுதானிய விழிப்புணர்வு கண்காட்சி வைக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவர்கள், சத்துணவு பணியாளர்கள், தன்னார்வலர் களை கொண்டு மாவட்ட அளவிலான சிறு தானிய விழிப்புணர்வு ஊர்வலம் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலிருந்து வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா வரை நடைபெற்றது.