திருச்சிராப்பள்ளி, செப்.1- கொரோனா பரவல் காலத்தில் கூட ஒன்றிய அர சாங்கம் மாணவர்களின் நல னில் அக்கறை இல்லாத போக்கை கடைபிடித்து வரு கிறது. இந்த பேரிடர் காலத் தில் கூட நீட் தேர்வு, ஜெ.இ.இ தேர்வை நடத்துவதற்கு தேதி அறிவித்து இருக்கிறது. நீட் தேர்வு துயரத்தின் அடையாளமான அரிய லூர் மாணவி அனிதாவின் நினைவு தினமான செவ்வா யன்று நாடு முழுவதும் ஒன் றிய அரசின் மாணவர் விரோ தப் போக்கைக் கண்டித்தும், நீட் தேர்வு, ஜே.இ.இ தேர்வு களை கைவடக் கோரியும் இடதுசாரி மாணவர் கூட்ட மைப்பு சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி
திருச்சி மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு இந்திய மாணவர் சங்க மாநகர் மாவட்டச் செயலா ளர் மோகன் தலைமை வகித் தார்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாணவர் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவர் வீர பாண்டியன், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் பா. ஆனந்த் ஆகியோர் தலைமை வகித்தனர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் கோ.அரவிந்த சாமி தலைமையில் மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கும்பகோணம், திரு நாகேஸ்வரம் அரசினர் மேல் நிலைப் பள்ளியில் நடை பெற்ற நிகழ்விற்கு மாணவர் சங்க தஞ்சை மாவட்ட செயற் குழு உறுப்பினர் கீர்த்தி வாசன் தலைமை வகித்தார்.