பொன்னம ராவதி, ஆக.28- புதுக்கோட்டை மாவட்டம் பொன்ன மராவதி நகரின் முக்கிய வர்த்தகப் பகுதியான அண்ணா சாலையில் கடந்த நான்கு மாதங்களாக காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. இப்பணிகளுக்காக தோண்டப்பட்ட பெரும் பள்ளம்-மேடு, சகதி, மண் புழுதியால் வர்த்தகர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டி களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட் டுள்ளது. எனவே உடனே சாலையை செப்பனிட்டு தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆக.31 (சனிக்கிழமை) அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற உள்ளது. அதையொட்டி புதனன்று நடந்த கையெழுத்து இயக்கத்திற்கு, கட்சி யின் ஒன்றியக் குழு உறுப்பி னர் பாஸ்கர் தலைமை வகித் தார். ஒன்றியச் செயலாளர் பக்ருதீன், ஒன்றிய குழு உறுப்பினர்கள், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் பழனி யப்பன், திராவிடர் கழக ஒன்றியத் தலைவர் ஆறு முகம் ஆகியோர் பொன்னம ராவதி நகர் பகுதி முழுவதும் பொதுமக்களிடம் கையெ ழுத்து பெற்றனர்.