அறந்தாங்கி, ஆக.4 -
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்த லின்படியும், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலு வலர் வழிகாட்டுதலின்படியும் மணமேல்குடி ஒன்றியத்தில் அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர்களுக்கான கூட்டம் நடை பெற்றது.
வட்டார கல்வி அலுவலர் செழியன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு’ பள்ளி திட்டத் திற்கு கனரா வங்கியின் மூலம் கணக்கு எண் தொடங்கப்பட வேண்டும். பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள் பள்ளியின் அடிப்படை கட்டமைப்புகள், மாணவர்களுக்கு தேவைப்படும் கழிவறை, வகுப்பறை, குடிநீர் வசதிகள் மற்றும் சத்துணவு தரம் உள்ளிட்டவற்றின் செயல்பாடுகளை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். தங்கள் பள்ளிக்கு தேவை யான அடிப்படை வசதிகளை செய்வதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர் பயிற்றுநர்கள், இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.