மயிலாடுதுறை, ஆக. 26 - மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தின் தூண்டில் வளைவு பகுதியில் தரங்கம்பாடி சீகன்பால்கு ஆன்மீக மன்றம் மற்றும் சென்னை குருக்குல இறை யியல் கல்லூரி இணைந்து நடத்திய சுற்றுச் சூழல் சமூக விழிப்புணர்வு தூய்மைப் பணி முகாம் ஞாயிறன்று நடைபெற்றது. புதிய எருசலேம் ஆலய ஆயரும், சீகன்பால்கு ஆன்மீக மன்ற இயக்குநரு மான சாம்சன் மோசஸ் தலைமையில் நடந்த முகாமில் இறையியல் கல்லூரி பதிவரும், பேராசிரியருமான ஆயர்.ஜாய்ஸ் எஸ்தர், தரங்கம்பாடி பேரூராட்சி துணைத் தலை வர் பொன்.இராஜேந்திரன் ஆகியோர் தூய்மை பணி மேற்கொண்ட இறையியல் கல்லூரியின் முதலாமாண்டு, மூன்றா மாண்டு மாணவர்களை பாராட்டினர். நிகழ்ச்சியில் இயற்கையை பாதுகாப் போம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம், பிளாஸ்டிக் ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாது காப்பு பதாகைகளை ஏந்தி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.