districts

img

ரூ.65 ஆயிரம் வரை சம்பளம்: இந்து சமய அறநிலையத்துறையில் வேலை

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் திருச்சி தாயுமானசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்;
நிர்வாகம்: இந்து சமய அறநிலையத்துறை
மொத்த காலியிடங்கள்:13

பணி: தட்டச்சர் - 01
சம்பளம்: மாதம் ரூ.18,500 - ரூ.58,600 வழங்கப்படும்.

பணி: கணினி இயக்குநர் - 01 
தொழில்நுட்ப உதவியாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.20,600 - ரூ.65,500 வழங்கப்படும்.

பணி: தூய்மை பணியாளர் - 10
சம்பளம்: மாதம் ரூ.10,000 - ரூ.31,500 வழங்கப்படும்.

தகுதி : ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வயது வரம்பு : 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : வேலை நாள்களில் கோயிலில் உள்ள அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.12.2021

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: உதவி ஆணையர், செயல் அலுவலர், அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவில், மலைக் கோட்டை, திருச்சி -2 

;