புதுக்கோட்டை, பிப்.28 - மனிதனின் புதிய, புதிய கண்டு பிடிப்புகளே உண்மையான கடவு ளாக இருந்து உலகை வழி நடத்திச் செல்கிறது என்றார் தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.டி.பால கிருஷ்ணன். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனமும், தமிழ்நாடு அறி வியல் இயக்கமும் இணைந்து, தேசிய அறிவியல் தின விழாவை புதுக்கோட்டை எம்.எஸ்.சுவாமி நாதன் ஆராய்ச்சி நிறுவன அலுவல கத்தில் புதன்கிழமை நடத்தியது. ‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி’ திட்ட மாணவர்கள் மத்தியில் நடைபெற்ற விழாவிற்கு அறிவியல் இயக்க மாவட்டச் செய லாளர் எம்.வீரமுத்து தலைமை வகித் தார். தேசிய அறிவியல் தின விழா குறித்து கள அலுவலர் டி.விமலா உரையாற்றினார். விழாவில் தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.டி.பால கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகை யில், “அறிவியல் மூலமாகத்தான் இந்த நவீன உலகம் கட்டமைக்கப் பட்டுள்ளது. இந்த உலகத்தை நாளுக்குநாள் அறிவியல்தான் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது. மனிதனின் உண்மை யான கடவுள் புதிய, புதிய கண்டு பிடிப்புகள்தான். ஒவ்வொரு குழந் தையும் அறிவியல் மனப்பான் மையை சிறுவயது முதலே வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுவே உங்களின் எதிர்காலம் சிறந்து விளங்க உதவும்” என்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவுப் பரிசு கள் வழங்கப்பட்டன. விழாவில் புதுக்கோட்டை திருவப்பூர் நகராட்சி உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாண வர்கள் பங்கேற்றனர். முன்னதாக மாணவர்கள் அறிவியல் மனப் பான்மை உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.