districts

img

சாலைப் பணியாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

பெரம்பலூர், ஜூன் 3-

      சாலைப் பணியாளர்களுக்கு 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க கோரி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சார்பில் தமிழக முதல்வரின் கவன ஈர்ப்பு கோரிக்கை முழக்க போராட்டம் மற்றும் முதலமைச்சர், தனிப்பிரிவு செயலாளர், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், தலைமை பொறியாளர், மற்றும் கண்காணிப்பு பொறியாளர் ஆகியோருக்கு தபால் அனுப்பும் இயக்கம் நடைபெற்றது.  

    நிகழ்விற்கு மாவட்ட இணைச்செயலாளர் பி.மதியழகன் வரவேற்றார். கோட்டத் தலைவர் பி.ராஜ்குமார் தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் அ.ராஜா, ரமநாயகம், இணைச்செயலாளர்கள் கே.மணிவேல், எஸ்.ரஜினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

   நிகழ்வில், மாநிலச் செயலாளர் கே.பழனிசாமி, மாவட்டச் செயலாளர் சி.சுப்ரமணியன், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.அகஸ்டின், மாநிலச் செயற்குழு உறுப்பினர் பி.சுப்ரமணியன், மாவட்டத் தலைவர் குமரிஆனந்தன் ஆகியோர் பேசினர். உட்கோட்ட தலைவர் பழனிசாமி நன்றி கூறினார்.

    சாலைப் பணியாளர்களுக்கு 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும், சாலைப் பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியருக்குரிய ஊதிய மாற்றம் ரூ.5 ஆயிரத்து 200 முதல் ரூ.20 ஆயிரத்து 200 வரை வழங்க வேண்டும், சாலைப் பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்துப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.  

   முன்னதாக ஒடிசா மாநில ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கரூர்

    கரூர் மாவட்டக் குழு சார்பில் கரூர் கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.செவந்திலிங்கம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.பழனிச்சாமி வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கெ.சக்திவேல், மாவட்டப் பொருளாளர் பொன்ஜெயராம், மாவட்டத் துணைச் செயலாளர் இளங்கோ ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்டப் பொருளாளர் எல்.பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.