districts

பாலியல் வன்புணர்வுக்கு ஆளான மனவளர்ச்சி குன்றிய பெண்ணை அரசு காப்பகத்தில் பராமரிக்க கோரிக்கை

தஞ்சாவூர், ஆக.25-  பாலியல் வன்புணர்வுக்கு ஆளான மனவளர்ச்சி குன்றிய பெண்ணை காப்பகத்தில் சேர்க்க  வேண்டும். அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு  அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன் கேட்டுக் கொண்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், செக்கடிக் கொல்லை கிராமத்தில் வசித்து  வரும் 31 வயது நிரம்பிய மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி இளம்பெண்ணை, அதே தெருவில் வசிக்கும் சுப்பிரமணியன் (43)  என்பவர் பாலியல் வன்புணர்வு செய் துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், குற்றவாளி கைது  செய்யப்பட்டு விசாரணை நடை பெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளார்.  இந்நிலையில், தகவலறிந்த, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன், அமைப் பின் மாநிலச் செயலாளர் ஜான்சி  ராணி, சிபிஎம் மாவட்டச் செயலா ளர் சின்னை.பாண்டியன், மாவட்டச்  செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம் ஆகியோரை தொடர்பு கொண்டு பேசினார்.  தொடர்ந்து, அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.வாசு,  மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங் கோவன், மாவட்ட துணைத் தலை வர் ஏ.மேனகா, மாவட்ட துணைச் செயலாளர் சி.ஏ.சந்திர பிரகாஷ், கோவி.ராதிகா, பட்டுக்கோட்டை ஒன்றிய பொறுப்பாளர்கள் ரெ. ஞானசூரியன், மணிகண்டன், குமார், செந்தில்குமார், ஒரத்தநாடு ஒன்றியத் தலைவர் தங்கப்பன், சேதுபாவாசத்திரம் ஒன்றியத் தலைவர் ராஜேஷ் கண்ணா ஆகி யோர் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களை சந்தித்து நடந்த விவரங்களை கேட்டறிந்தனர்.  பின்னர், பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர், வாட்டாத்திக் கோட்டை காவல் ஆய்வாளர் ஆகி யோரை சந்தித்துப் பேசினர்.  இழப்பீடு வழங்க வேண்டும்  இதுகுறித்து பி.எம்.இளங்கோ வன் கூறுகையில், “மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி தனிப்படையினரால் குற்றவாளி கைது செய்யப்பட்டு திருச்சி சிறை யில் அடைக்கப்பட்டுள்ளார். இவ் வழக்கை பேராவூரணி காவல் நிலைய பெண் ஆய்வாளர் பசுபதி விசாரித்து வருகிறார். பாதிக்கப் பட்ட பெண்ணின் அத்தைதான், அவரை பராமரித்து வருகிறார். பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பதை மருத்துவ ஆய்வு உறுதிப்படுத்தி உள்ளது. தற்போது சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பி யுள்ளார். பெண்ணின் தந்தையார் உடல் நலிவுற்றவர்.  பராமரிக்க முடியாத நிலையில்  உள்ள அந்தப் பெண்ணை அரசு காப்பகத்தில் சேர்த்து பராமரிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் ணுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிக்கு அதிக பட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும்” என்றார்.