அரியலூர், ஏப்.30 - உலகத் திருக்குறள் கூட்ட மைப்பு தலைவர் மு.ஞான மூர்த்தி, தென்னக ரயில்வே மேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், “அண் மையில் தென்னக ரயில்வே துறை கீழ்க்கண்ட வழித்தடத் தில் மே 2 ஆம் தேதி முதல் விழுப்புரம் - தாம்பரம் பயணிகள் ரயிலை நீடித்து உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறேன். விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் திரு வாரூர் வரை நீட்டிப்பு, சென்னை கடற்கரை -வேலூர் ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு, திருச்சி - விருத்தாசலம் ரயில் விழுப் புரம் வரை நீட்டிப்பு, சேலம் - விருத்தாசலம் ரயில் கடலூர் துறைமுகம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பயணிகள் ரயில் காலை 5.20 மணிக்கு விழுப்புரத்திலிருந்து புறப் பட்டு, காலை 8.15 தாம்பரம் சென்றடையும். தாம்பரத்தி லிருந்து மாலை 6 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு விழுப் புரம் சென்றடையும். இந்த விரைவு பயணிகள் ரயில், அரியலூரிலிருந்து புறப்படுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதனால் ஆயி ரக்கணக்கான தொழிலாளர்கள், விவசாயி கள், மாணவர்கள் பயனடைவார்கள்” என தெரிவித்துள்ளார்.