districts

img

ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தரவு உள்ளீட்டாளரை நியமிக்க செவிலியர்கள் கோரிக்கை

திருவாரூர், ஜூன் 21 - தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் இந்திரா தலைமையில் நடைபெற்ற இந்த  ஆர்ப்பாட்டத்தில், டாக்டர்  முத்துலட்சுமி ரெட்டி நிதியுதவி திட்டப்  பணியை சமூக நலத்துறை மற்றும் வருவாய்த் துறையிடம் ஒப்படைத்து கிராம சுகாதார செவி லியர்கள் மேற்கொள்ளும் தாய்-சேய்  நலப்பணி. தடுப்பூசிப் பணி மற்றும் குடும்ப நலப் பணிகள் செவ்வனே நடை பெற உத்தரவு வழங்க வேண்டும். கிராம சுகாதார செவிலியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணி களுக்கு முரணாக, அரசு ஆணைக்கு எதிராக, இதரப் பணிகளில் குறிப்பாக கணினி பணிக்கு உட்படுத்துவதையும், மிரட்டுவதையும், அச்சுறுத்துவதையும் கைவிட்டு கணினி பணியை மேற் கொள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு தரவு உள்ளீட்டாளர்களை நிய மிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலப் பொருளாளர் பாத்திமா மேரி, மாநில பொதுச் செயலா ளர் நிலா மற்றும் மாநிலத் துணைத் தலை வர் வசந்தா, மேரி ஜாக்குலின் உட்பட 50-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர்.