districts

திருமாவளவன் குறித்து அவதூறாக பதிவிட்டவர் கைது

அரியலூர், ஜூன் 14-

    அரியலூர் மாவட்டம் பாப்பாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் திருமேனி. இவர் தனது சமூக வலைதளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் குறித்து இழிவுபடுத்தி அவர் மாண்பை கெடுக்கும் வித மாக பதிவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.  

    இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட  துணைச் செயலாளர் கதிர்வளவன் மீன்சுருட்டி காவல்  நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து திருமேனியை கைது செய்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து திருமேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டார்.