புதுக்கோட்டை, செப்.9 - புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மு.அருணா, தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 489 மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தர விட்டார். பின்னர், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில், 30 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.2,25,000 மதிப்பிலான பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கி னார்.