districts

திருச்சி முக்கிய செய்திகள்

கோமாரி நோய் தடுப்பு கால்நடை சிறப்பு முகாம்

பொன்னமராவதி, ஜூன் 18 -  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே  கண்டியாநத்தம் ஊராட்சியில் கண்டியாநத்தம் மற்றும்  க.புதுப்பட்டி ஆகிய கிராமங்களில் கோமாரி நோய்  தடுப்பு கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி முருகேசன் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் 50-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய்களை தடுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. கால்நடை உதவி  மருத்துவர் ராஜசேகர் தலைமையிலான மருத்துவ குழு வினர் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தினர். கண்டி யாநத்தம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கால்நடை வளர்ப்போர் பயனடைந்தனர்.

மேலும் கால்நடை தடுப்பூசி பணியானது, கால்நடை  மருத்துவமனை உள்ள ஆலவயலை சுற்றியுள்ள கிராமங்களுக்கு ஜூன் 30 வரை தொடர்ந்து நடைபெற உள்ளதாக கால்நடை பராமரிப்புத் துறையினர்‌ தெரி வித்துள்ளனர்.

தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது

கும்பகோணம், ஜூன் 18- கும்பகோணம் பகுதியில் வழிப்பறி உள்ளிட்ட திருட்டு  சம்பவங்கள் நூதன முறையில் தொடர்ந்து நடைபெறு கின்றன.

இந்நிலையில் ஜூன் 15 அன்று கும்பகோணம் புதிய  பேருந்து நிலையத்தில் புவனேஸ்வரி என்பவர் பேருந்து  ஏற முயன்ற போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில்  வந்த மர்ம நபர், புவனேஸ்வரியின் கைப்பையையும், பணம் ரூ.2,000, செல்போன் மற்றும் சுமதி என்பவரின் கைப்பையையும் பணம் ரூ.5,000-யும் பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.

தொடர்ந்து அதேபோல் கபிஸ்தலம், பாலக்கரை காவேரி ஓட்டல் அருகில் அகிலா கைப்பை, அதில் இருந்த  ரூ.10,100, செல்போன் ஆகியவற்றையும் அடையாளம் தெரியாத நபர் திருடிச் சென்றுள்ளார். இது தொடர்பாக கும்பகோணம் மேற்கு காவல் நிலையம் மற்றும் கபிஸ்த லம் காவல் நிலையத்தில் இரு வழக்குகள் பதியப் பட்டன.

இந்த தொடர் வழிப்பறி நபர்களை கைது செய்யும் பொருட்டு, தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் உத்தரவுப்படி, கும்பகோணம் துணை  காவல் கண்காணிப்பாளர் கீர்த்திவாசன் மேற்பார்வை யில், கும்பகோணம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர்  ஜெகதீசன் மற்றும் கும்பகோணம் உட்கோட்ட குற்றத் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன் தலைமை யிலான தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, பல்வேறு இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை  ஆய்வு செய்து வந்தனர்.

அப்போது தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கும்பகோ ணம் அருகே உள்ள புளியம்பாடி காலனி தெருவைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரை கைது செய்து, அவரிட மிருந்து வழிப்பறி சம்பவங்களில் களவுபோன பணம் ரூ. 7000 மற்றும் இரு செல்போன்கள் (மதிப்பு ரூ.42,000/-) மீட்கப்பட்டுள்ளன.

தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட நபரை 48 மணி நேரத் திற்குள் கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்த கும்ப கோணம் உட்கோட்ட தனிப் படையினருக்கு உயர் அதி காரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

ஜூன் 21 திருவாரூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருவாரூர், ஜுன் 18 - திருவாரூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணிய மர்த்தம் செய்யும் நோக்கத்தோடு திருவாரூர் விளமல் கூட்டுறவு நகரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்  தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 21.6.2024 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணியளவில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்  நடைபெறவுள்ளது.

இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறு வனங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். இத்தனி யார்துறை முகாமில் 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு  மற்றும் ஐ.டி.ஐ. டிப்ளமோ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித் தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்கள் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொள்ளலாம். 

மேலும், இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகா மில் கலந்து கொள்ள வேலைநாடும் இளைஞர்கள் www. tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து அந்த படிவத்தினை பதிவிறக்கம் செய்து  முகாமிற்கு கொண்டு வருமாறு மாவட்ட ஆட்சியர் தி. சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

சென்ட்ரிங் பலகை சரிந்து விழுந்து ஒருவர் பலி
4 பேர் படுகாயம்

பாபநாசம், ஜூன் 18- தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே ரூ.9  கோடியில் புதுமாத்தூர்-ஒத்தைவீடு இடையே குடமுருட்டி  ஆற்றில் புதிய பாலம், கடந்த ஆறு மாதங்களாக தனி யார் கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்டு வருகிறது. தினந்தோறும் சுமார் 40 பேர் பாலம் கட்டும் பணியில் ஈடு பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திங்களன்று இரவு வழக்கம் போல சுமார் 10 பேர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப் போது சென்ட்ரிங் பலகை சரிந்து விழுந்தது. இதில் திரு வாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ராயபுரத்தைச் சேர்ந்த ராமன் (55) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படு காயமடைந்த நீடாமங்கலம், ராயபுரத்தைச் சேர்ந்த செல்வ மணி, நாகப்பட்டினம் பரவையைச் சேர்ந்த ராஜா, திருத் துறைப்பூண்டி கோட்டூரைச் சேர்ந்த மாதவன், மேற்கு வங்கத் தைச் சேர்ந்த சுபாஷ் ஆகிய 4 பேர் தஞ்சாவூர் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட னர். இதுகுறித்து அய்யம்பேட்டை போலீசார் விசாரணை  மேற்கொண்டுள்ளனர்.