districts

img

தண்ணீர்பந்தல்பட்டிக்கு பகுதி நேர அங்காடி கோரி மனு

புதுக்கோட்டை, ஏப்.24-

    புதுக்கோட்டையை அடுத்த செம்பாட்டூர்  ஊராட்சிக்கு உட்பட்ட தண்ணீர்பந்தல் பட்டிக்கு பகுதிநேர அங்காடி உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி திங்கள்கிழமையன்று மாவட்ட ஆட்சியரிடம் விவசாயத் தொழிலா ளர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

   மனுக்கொடுக்கும் நிகழ்ச்சியில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி. சலோமி, ஒன்றியச் செயலாளர் சி.ராஜா, விவ சாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் மாரி முத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.