அறந்தாங்கி ,செப்.5- புதுக்கோட்டை மாவட்டம் ஆவு டையார்கோயிலை அடுத்த பெருநாவ லூரில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் அலகு .2. திட்ட அலு வலர் ரமேஷ் தலைமையில் என்.எஸ் எஸ் மாணவ மாணவியர் அறந்தாங்கி அரசு மருத்துவமனை வளாகத்தில் தூய் மைப் பணியை மேற்கொண்டார்கள். இந்த தூய்மை பணியை அறந் தாங்கி வர்த்தக சங்க தலைவர் தங்க துரை தலைமையில் செயலாளர் சுரேஷ் குமார், பொருளாளர் ஹரீஸ் முகமது, தலைமை மருத்துவர் சேகர் முன்னிலை யில் அறந்தாங்கி அரசு தலைமை மருத் துவமனையை வளாகத்தில் சுற்றி இருந்த புற்செடிகள், பிளாஸ்டிக் கழிவுகள், தேவையற்ற செடி, கொடிகளை அகற்றி தூய்மை பணியை செய்தனர்.