திருச்சிராப்பள்ளி, ஜூலை 4 - தேசிய அளவிலான சிலம்பப் போட்டி திருச்சி தில்லைநகரில் உள்ள கி.ஆ.பெ. மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. உலக சிலம்ப கோர்வை அகாடமி, உலக சிலம்ப யூத் பெட ரேசன் இணைந்து நடத்திய இந்த போட்டியில், 400 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டி களை தமிழ்நாடு சிலம்பக் கோர்வை துணைத்தலைவர் மோகன், சத்யானந்தா ஆகி யோர் கொடியசைத்து தொ டங்கி வைத்தனர். இதில் மழலையர், மினி சப் ஜூனியர், சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் பிரிவுகளில் குத்து வரிசை, நெடுக்கம்பு வீச்சு, நடுக்கம்பு வீச்சு, இரட்டைக் கம்பு, கம்பு சண்டை தொ டும் முறை போட்டிகள் நடை பெற்றன. போட்டிகளின் முடிவில் 75 புள்ளிகளை பெற்ற, மன்னை மகா லிங்கம் சிலம்ப கழகம் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. 69 புள்ளிகளை பெற்று சீர்கா ழியை சேர்ந்த மாவீரன் சிலம்ப கழகம் இரண்டாம் இடமும், 56 புள்ளிகளை பெற்று வீரபாண்டி சிலம்ப கழகம் மூன்றாவது இடத் தையும் பெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.