districts

img

ஆவுடையார்கோயிலில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆலோசனை

அறந்தாங்கி,ஆக. 29-  புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடை யார்கோவில் தாலுகாவில்   ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் செயல்படும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆவுடை யார்கோவில் தாலுகா  அலுவலகத்தில் இயற்கை பேரிடர் தொடர்பாக ஆலோசனை வழங்கினார்கள். மேலும் பேரிடர் ஏற்படும்  பகுதிகளை ஆராய்ந்து வெள்ளம், புயல், நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரிடர் பாதிப்பு அடையக் கூடிய இடங்களை கண்டறிந்து ஆய்வு செய்தனர். பாம்பாறு ,வெள்ளாறு, முத்துக்குடா மீன்பிடி தளம் மற்றும் முத்துக்கு டா பள்ளியில் அமைந்துள்ள தானியங்கி  எச்சரிக்கை  கருவி , ஆலத்தூர் பேரிடர் பல் நோக்கு மையம் மற்றும் முத்துக்குடா பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  நிகழ்வின் போது வட்டாட்சியர், உதவி இயக்குனர் மீன்வளத்துறை வனத்துறை அலுவலர் தீயணைப்பு துறை அலுவலர் மற்றும் வருவாய்த்துறை சார்ந்துள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் ,கிராம உதவியா ளர்கள் கலந்து கொண்டனர்.