districts

img

களப்பக்காடு பகுதியில் மஞ்சுவிரட்டு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி களப்பக்காடு பகுதியில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த 12 காளைகளும், 12 குழுக்களைச் சேர்ந்த 100 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். போட்டியில் வென்ற வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.